உள்நுழைக

சட்டரீதியான பணப்புழக்க விகிதம் என்றால் என்ன மற்றும் அது உங்கள் முதலீடுகளை எவ்வாறு பாதிக்கிறது? ​

வங்கிகளுக்கு ஆர்பிஐ மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ள சட்டரீதியான பணப்புழக்க விகிதம், உங்கள் தந்தை ஒவ்வொரு மாதமும் சிறிது பணத்தைச் சேமிக்க உங்களை கட்டாயப்படுத்துவது போலாகும், ஏனெனில் அவர் உங்களிடம் இருக்கும் நிகர தொகையின் செலவை ஒழுங்குபடுத்த விரும்புகிறார். இருப்பினும், இந்திய பொருளாதாரத்தில், இந்த ஒழுங்குமுறை இந்திய ரிசர்வ் வங்கியால் நிறைவேற்றப்படுகிறது. அதுகுறித்து உங்களுக்கு விளக்கமளிக்க எங்களை அனுமதிக்கவும்.

ஒரு வங்கி அதன் தொழிலை எவ்வாறு நடத்துகிறது?

ஒரு வங்கிக்கு, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் என்பது நீங்கள் நினைப்பதற்கு மாறாக இருக்கலாம். சேமிப்புகள்/நடப்பு கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள் போன்றவற்றின் மூலம் நீங்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள்; அதே போலவே பல்வேறு வணிகங்களும் தொழிற்சாலைகளும் செய்கின்றன. நீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் உங்கள் சேமிப்புகள்/நடப்பு கணக்குகளில் இருந்து நீங்கள் பணத்தை வித்ட்ரா செய்யலாம்; ஆனால் ஒரு நிலையான வைப்புத்தொகையில் இருந்து அதே போன்று வித்ட்ரா செய்வது நேரத்தால் கட்டுப்படுத்தப்படலாம். நீங்கள் 1 ஆண்டுக்கு எஃப்டி-யில் முதலீடு செய்திருந்தால், நீங்கள் பொதுவாக 1 ஆண்டு காத்திருக்க வேண்டும், அதற்குப் பிறகே வித்ட்ரா செய்யலாம். நீங்கள் வித்ட்ரா செய்யும் பணத்துடன் வட்டித் தொகையும் கிடைக்கும். எனவே, இந்த வைப்புகள் வங்கியின் பொறுப்புகளாக மாறுகின்றன, ஏனெனில் நீங்கள் வித்ட்ரா செய்ய விரும்பும் போது இந்தப் பணம் உங்களுக்கு வழங்கப்பட வேண்டும். சேமிப்புகள்/நடப்பு கணக்குகளில் (எடுத்துக்காட்டாக) உள்ள பணம் கோரிக்கை பொறுப்பு என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒரு நிலையான வைப்புத்தொகையில் (எடுத்துக்காட்டாக) உள்ள பணம் நேரப் பொறுப்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பணம் பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க வங்கிகளால் பயன்படுத்தப்படுகிறது, இதில் அது சிறிது வட்டியைச் சம்பாதிக்கிறது. மேலும் வட்டியைச் சம்பாதிக்க, வங்கியில் வைப்புத்தொகை செய்யப்பட்ட பணத்தை மற்ற வங்கிகளில் முதலீடு செய்ய உங்கள் வங்கி பயன்படுத்தலாம். எனவே, பணத்தின் இந்த அனைத்து ஆதாரங்களும் வங்கியின் சொத்துக்களாக மாறுகின்றன. ஒவ்வொரு வங்கியும் கடன் வாங்குபவர்களுக்குப் பணத்தைக் கடனாக வழங்க அதன் பொறுப்புகளைப் பயன்படுத்துகிறது.

கடன்களை வழங்குவதற்கான வங்கிக்கு கிடைக்கக்கூடிய தொகை அதன் நிகர கோரிக்கை மற்றும் நேர பொறுப்புகள் (என்டிடிஎல்) என்று அழைக்கப்படுகிறது, இது அடிப்படையில், மற்ற வங்கிகளில் முதலீடு செய்த தொகையைக் குறைத்து உங்களைப் போன்ற நபர்களால் வங்கிக்கு செய்யப்பட்ட அனைத்து வைப்புகளின் தொகை ஆகும்.

என்டிடிஎல்= அனைத்து பொறுப்புகள்- மற்ற வங்கிகளில் வைப்புகள்

எஸ்எல்ஆர் உடன் என்டிடிஎல்-க்கு என்ன தொடர்பு?

இப்போது, ஒரு வங்கிக்கான என்டிடி எல் ₹ 10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம், அதாவது வங்கி இந்த முழு 10 லட்சத்தையும் கடனாக வழங்க முடியுமா? இல்லை. ஏனெனில் அது நடந்தால், வங்கிக்கு எந்த லிக்விட் மணியும் அல்லது பஃபரும் இல்லாமல் போய்விடும். ஒவ்வொரு வணிகத்திற்கும் ரொக்க பணப்புழக்கம் தேவைப்படுகிறது மற்றும் வங்கிகளின் விஷயத்தில் இதை ஒழுங்குப்படுத்துவது, இந்திய ரிசர்வ் வங்கியின் பணி ஆகும். இந்த ₹ 10 லட்சத்தின் ஒரு பகுதியை வங்கியில் லிக்விட் சொத்துக்களின் வடிவத்தில் வைத்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கட்டாயப்படுத்துகிறது. லிக்விட் சொத்துக்கள் என்பது பணம் அல்லது எளிதாக பணமாக மாற்றப்படக்கூடியது, எடுத்துக்காட்டாக- பணம், தங்கம் அல்லது அரசு பத்திரங்கள் போன்றவை. இந்த சதவீதம் சட்டரீதியான பணப்புழக்க விகிதம் (எஸ்எல்ஆர்) என்று அழைக்கப்படுகிறது. எங்களது எடுத்துக்காட்டாக, ஆர்பிஐ வங்கிகளை 20% எஸ்எல்ஆர்-ஐ பராமரிக்கக் கட்டாயப்படுத்தினால், வங்கி லிக்விட் சொத்துக்களில் ₹ 2 லட்சத்தை வைத்திருக்கும் மற்றும் மீதமுள்ள ₹ 8 லட்சத்தை மட்டுமே கடனாக வழங்க முடியும். ஏதேனும் நெருக்கடி நிலை ஏற்பட்டால் இந்த ₹ 2 லட்சம் வங்கிக்கான பாதுகாப்பு வலை போன்றது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள எடுத்துக்காட்டு, விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே.

எஸ்எல்ஆர்= (ஆர்பிஐ/ என்டிடிஎல் மூலம் கட்டாயப்படுத்தப்பட்ட லிக்விட் சொத்துகள்)%

வங்கிகளுக்கான எஸ்எல்ஆர்-ஐ ஆர்பிஐ ஏன் ஒழுங்குபடுத்துகிறது?

மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இல்லாமல் வழங்குவதற்குச் சரியான தொகைக் கிடைப்பதை உறுதி செய்ய எஸ்எல்ஆர்-ஐ ஆர்பிஐ ஒழுங்குபடுத்துகிறது. வங்கிகள், மாறாக, லிக்விட் சொத்துக்களாக வைத்திருக்கும் எஸ்எல்ஆர் பணத்தின் மீது வட்டியை சம்பாதிக்கின்றன, தங்களை பாதுகாக்க அதை ஒரு பஃபராகக் கருதுகின்றன. நம் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை எஸ்எல்ஆர் ஒழுங்குமுறை எவ்வாறு பாதிக்கிறது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி என்பதைப் பார்ப்போம் வாருங்கள்-

எனவே, எஸ்எல்ஆர் % ஐ குறைப்பதன் மூலம் அல்லது அதிகரிப்பதன் மூலம், ஆர்பிஐ சந்தையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம். உங்கள் மாதாந்திர வருமானம் ₹ 1 லட்சம் என்று வைத்துக்கொள்ளவும், உங்கள் மாதாந்திர செலவு ₹ 40,000 மற்றும் கட்டாயச் சேமிப்புகள் ₹ 20,000 இதனால், உங்கள் கையில் உங்கள் விருப்பத்தின்படி நீங்கள் செலவழிக்க ₹ 40,000 இருக்கும். இந்த விஷயத்தில் உங்கள் எஸ்எல்ஆர் 20% ஆகும். இப்போது, நீங்கள் எஸ்எல்ஆர்-ஐ 50%-க்கு அதிகரித்தால், நீங்கள் (₹ 10,000) செலவு செய்ய குறைவான பணம் இருக்கும், இதன் விளைவாக தேவையில்லாத அல்லது தாமதப்படுத்தக்கூடிய பொருட்களுக்கான தேவையைக் குறைக்கலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் விநியோகத்தையும் கோரிக்கையையும் நீங்கள் ஒழுங்குபடுத்துவது போலவே, ஆர்பிஐ இதை நமது நாட்டிற்குச் செய்கிறது.

எஸ்எல்ஆர் உங்கள் முதலீடுகளை எவ்வாறு பாதிக்கிறது?

கலந்துரையாடலை எளிதாக்குவதற்கு அரசாங்கப் பத்திரங்களில் கவனம் செலுத்துவோம். இப்போது, ஆர்பிஐ எஸ்எல்ஆர்-ஐ அதிகரித்துள்ளதாகக் கருதினால், அதாவது வங்கிகள் லிக்விட் சொத்துக்களில் அதிகப் பணத்தை வைத்திருக்க வேண்டும், எனவே, வங்கிகள் அரசாங்க பத்திரங்களில் அதிக முதலீடு செய்ய முயற்சிக்கும். தெளிவாக, அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதற்கான கோரிக்கை கணிசமாக அதிகரிக்கும்போது, அவற்றைப் பெறுவது கடினமாக இருக்கும். அதனால் அவற்றின் விலை அதிகரிக்கும். நீங்கள், ஒரு முதலீட்டாளராக, அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் இப்போது அவற்றை வாங்குவது மிகவும் கடினமானது என்பதை அறியலாம். இப்போது, அதிகரித்து வரும் கோரிக்கையைக் கொண்ட எதையும் போல, அதனுடன் தொடர்புடைய நன்மைகளும் குறைகின்றன. எனவே, அரசாங்கப் பத்திரங்களுடன் தொடர்புடைய வட்டி % குறையும். எஸ்எல்ஆர்-ஐ மேம்படுத்தப்படுவதற்கு முன்னர் அரசாங்கப் பத்திரங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், தற்போதைய சூழ்நிலையில், இப்போது பத்திரத்தின் செலவு அதிகரித்ததன் காரணமாக நீங்கள் ரிடீம் செய்யத் தேர்வு செய்தால் அதிக வருமானத்தைப் பெறுவீர்கள்.

ஒரு அதிகரிக்கப்பட்ட எஸ்எல்ஆர் என்பது கடன் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானம் என்பதாகும்.

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

​​
பொறுப்புத் துறப்பு:
முதலீட்டாளர்களுக்கான பயனுள்ள தகவல்: அனைத்து மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும் ஒரு-முறை கேஒய்சி(உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே கையாள வேண்டும், அவை எஸ்இபிஐ இணையதளத்தில் 'இடைத்தரகர்கள்/ சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கீழ் சரிபார்க்கப்பட வேண்டும்'. உங்கள் புகார்களை தெரிவிக்க, நீங்கள் www.scores.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். கேஒய்சி பற்றிய மேலும் தகவலுக்கு, பல்வேறு விவரங்களின் மாற்றம் பற்றி அறிய மற்றும் புகார்களை தெரிவிக்க, mf.nipponindiaim.com/investoreducation/what-to-know-when-investing ஐ பார்வையிடவும் இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் கற்றல் மற்றும் விழிப்புணர்வு முயற்சியாகும்.

இங்குள்ள தகவல் பொதுவான படிப்பு நோக்கங்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன மற்றும் எனவே வாசகர்களுக்கான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் அல்லது ஒரு தொழில்முறை வழிகாட்டியாக கருதப்பட முடியாது. இந்த ஆவணம் பொதுவாக கிடைக்கக்கூடிய தகவல், உருவாக்கப்பட்ட தரவு மற்றும் பிற நம்பக்கூடிய ஆதாரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குனர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான மற்றும் நம்பகத்தன்மைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்த தகவலின் பெறுநர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் விசாரணைகளை நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுக்க வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த மெட்டீரியலின் தயாரிப்பு அல்லது வழங்குதலில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவர்களின் துணை நிறுவனங்கள் இந்த மெட்டீரியலில் உள்ள தகவலில் இருந்து ஏற்படும் இழந்த இலாபங்கள் உட்பட எந்தவொரு நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவான, தண்டனைக்குரிய அல்லது உதாரணமான சேதங்களுக்கும் எந்தவொரு வழியிலும் பொறுப்பேற்காது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் பெறுநர் மட்டுமே முழுப் பொறுப்பாளியாக இருப்பார்.
மொழி பொறுப்புத் துறப்பு:
கட்டுரையை அந்தந்த வட்டார மொழி(களுக்கு) மொழிபெயர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், ஏதேனும் குழப்பம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கட்டுரையே இறுதியானதாகக் கருதப்பட வேண்டும். இங்கு வழங்கப்பட்ட கட்டுரை பொதுவான வாசிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கருத்துகளாக மட்டுமே உள்ளன, எனவே இவை வாசகர்களுக்கான வழிகாட்டுதல்களாகவோ, பரிந்துரைகளாகவோ அல்லது தொழில்முறை ஆலோசனையாகவோ கருதப்படக்கூடாது. பொதுவில் கிடைக்கும் தரவு/தகவல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தரவு மற்றும் நம்பகமானதாகக் கருதப்படும் பிற ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குநர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் & அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்தத் தகவலைப் பெறுபவர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் ஆய்வுகளை நம்பியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலைத் தயாரிப்பதில் அல்லது வழங்குவதில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், தகவல்களிலிருந்து எழும் லாப இழப்பு உட்பட, நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவு ரீதியான, தண்டனை பெற்றுத்தரக்கூடிய அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்கமாட்டார்கள். இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எந்த முடிவிற்கும் இதன் வாசிப்பாளர் மட்டுமே முழுப் பொறுப்பாவார்.
"மேலே உள்ள விளக்கங்கள் புரிந்துகொள்வதற்கு மட்டுமே, இது என்ஐஎம்எஃப்-இன் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது அல்ல. இங்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்கள் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன, அதனால் வாசகரால் பின்பற்றப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கான எந்தவொரு வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரைகளையும் உருவாக்க வேண்டாம். இந்த தகவல் பொதுவான படிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது மற்றும் வாசகர்களுக்கு ஒரு தொழில்முறை வழிகாட்டியாக சேவை செய்வதற்காக அல்ல."

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
மேலே